ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்: டெல்லி குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ புதிய தகவல்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதி உமர் முதலில் ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் போக்குவரத்து நெரிசலால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியதாகவும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.