துலீப் டிராபி கிரிக்கெட்: 13 வருடங்களுக்கு பிறகு கிழக்கு மண்டலம் சாம்பியன்
சென்னை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய தென் மண்டலம் அணி 107.3 ஓவர்களில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 99 ரன்கள் சேர்த்தார்.
தென் மண்டல அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 372 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய கிழக்கு மண்டலம் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.