வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
புவேனஸ்வர்: ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 22 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடேலார காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.