ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.
3 சிலிண்டர்கள் இலவசம்
“கடந்த 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் செலவு கூடியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், மக்கள் நலனை பாதுக்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்கான செலவழிக்கப்படும் தொகையினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.