ஓராண்டுக்கு நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - செப்டம்பர் மாதம் தொடங்குகிறது
புதுடெல்லி: நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஓராண்டுக்கு சோதனைகளை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு நாடு தழுவிய 24 சிறப்புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.