மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீ விபத்து - 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
மும்பை: மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.மும்பை: மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.