மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
சென்னை: பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள்
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை பழங்குடியினர் நலத் துறை வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு 357 மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் படிக்கச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறியதாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்களுக்கு சவாலான ஒன்று.
அதை தாண்டி படிக்க அவர்களுக்கு ஊக்கமளித்து வழிநடத்திச் செல்கிறோம். அதன்படி, வாசுகி பவுண்டேஷனுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து வருகிறோம்.