சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் படுகாயம்
சிவகாசி: சிவகாசி அருகே தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பட்டாசு திரி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல். படுகாயமடைந்த தொழிலாளி வேலுச்சாமிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.