ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடி..! வங்கிகளுக்கு அல்வா.. திவால் சட்டத்தால் தப்பிய முன்னாள் ராஜ்யசபா எம்.பி
டெல்லி: எஸ்செல் குழுமத்தின் (Essel Group) நிறுவனரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான சுபாஷ் சந்திரா தனக்குள்ள ரூ.22,006.57 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வெறும் ரூ.6.5 கோடி செலுத்தி கடனைத் தீர்ப்பதற்கான தனிநபர் திவால் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதன் மூலம் சுபாஷ் சந்திராவிற்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் அசல் தொகையில் 99.97% இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. அதாவது அவர் வாங்கி இருக்கும் ரூ.22,006.57 கோடி அளவிலான மொத்தக் கடனில் வெறும் 0.03% மட்டுமே வசூலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.