தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேன்றம்
சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் - சத்தீஸ்கர் அணிகள் மோதின.
லீக் சுற்றின் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளை பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 13-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, மணிப்பூருடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்கம் - உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன. அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.