திருச்சி எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை - 30 ஆண்டு குத்தகை நிறைவு
30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தி உள்ளது.
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெற்ற எஸ்ஆர்எம் குழுமம், அங்கு 100 அறைகள், நீச்சல் குளம், மதுக்கூடத்துடன் இணைந்த சொகுசு விடுதியை (ஹோட்டல்) 1994-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.