கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி!!
கீழடியில் நடைபெற்ற 10-ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்தது. இதனையடுத்து கீழடியில் 11-ம் கட்ட அகழாய்விற்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி வழங்கியது. கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது. ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.