இலங்கை கிரிக்கெட் அணி வேகப் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமனம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.