உ.பி.,யில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஒத்திவைப்பு: அகிலேஷ் கண்டனம்
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் தேதியை ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடுவதாக இருந்தது. அனால் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று இறுதி பட்டியல் வெளியிடும் தேதி பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 6 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.