... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

பெங்களூரு: பட்​டியலின உள் ஒதுக்​கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்​களின் கல்​வி, வேலை வாய்ப்பு பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாடக மாநில அரசு பட்​டியலில் உள்ள 101 சாதி​களை எஸ்​சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி - சி ஆகிய 3 பிரிவு​களாக பிரித்​துள்ளது. மொத்​த​முள்ள 17 சதவீத இட ஒதுக்​கீட்​டில் எஸ்சி - ஏ 6 சதவீதம், எஸ்சி - பி 6 சதவீதம், எஸ்சி - சி 5 சதவீதம் உள் இட ஒதுக்​கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்​ளி​களைக் கொண்ட இன சுழற்சி முறை​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில் எஸ்சி - ஏ பிரி​வினருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் முதல் இடம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், எஸ்சி - பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி - சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.

அரசின் இந்த முடி​வால் எஸ்சி பி மற்​றும் எஸ்சி சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்​டிய கல்​வி, வேலை வாய்ப்பு இடங்​கள் பறி போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எஸ்சி பி பிரி​வில் இடம் பெற்​றுள்ள‌ தமிழ்ப் பேசும் ஆதி திரா​விடர், பறையர், வள்​ளுவர், சாம்​பவர் உள்​ளிட்ட சாதி​யினர் பாதிக்​கப்​படு​வ​தால், அம்​மக்​கள் கோபம் அடைந்​துள்​ளனர். கர்​நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூரு​வில் பல்​கலைக்கழக பாபா​சாகேப் அம்​பேத்​கர் மாணவ அமைப்​பினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். ஷிமோ​கா​வில் உள்ள ஆதி திரா​விடர் அமைப்​பினர் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இது குறித்து ஆதி​ திரா​விட மகாஜன சபை​யின் மூத்த தலை​வர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், "தமிழ்​நாட்​டில் அருந்ததியினருக்கு வழங்​கப்​பட்ட முன்​னுரிமை​யுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்​கீட்​டால் அங்​குள்ள பறையர் உள்​ளிட்ட 76 சாதியினர் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தற்​போது கர்​நாடக அரசு முடி​வால் இங்​குள்ள எஸ்​சி- பி பிரி​வில் உள்ள சுமார் 1.5 கோடி​யினருக்கு கல்​வி, வேலை​வாய்ப்​பில் பெரும் பாதகம் ஏற்படும். அதி​லும் குறிப்​பாக தமிழ் ஆதி ​தி​ரா​விடர்​கள் கர்​நாடகா முழு​வதும் சுமார் 60 லட்​சம் பேருக்கு உயர் கல்வி நிலை​யங்​களில் கற்கும் உரிமை​யும், ஊக்க தொகை​யும், அரசு வேலை வாய்ப்​பும் கிடைக்​காமல் போகும். கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றத்திலும் இட ஒதுக்​கீட்டு முறைக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டுள்​ளது. சித்தராமையா தலை​மையி​லான காங்​கிரஸ் அரசு இதனை திரும்ப பெறா​விட்​டால், வரு​கிற தேர்​தலில் கடும் பின் விளைவை சந்​திக்க நேரிடும்​" என்​றார். முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் சொந்த மாவட்​ட​மான மைசூருவில் போராட்​டம் நடப்​ப​தால் அவருக்கு நெருக்​கடி ஏற்​பட்​டுள்ளது. எதிர்க்​கட்​சி​யான பாஜகவும், எஸ்சி பி பிரி​வில் உள்ள சாதி அமைப்​பினரும் காங்​கிரஸுக்கு எதி​ராக திரண்​டுள்​ள​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பட்​டியலின உள் ஒதுக்​கீட்​டுக்கு எதி​ராக மைசூரு​வில்​ நேற்​று கண்​டனப்​ பேரணி நடைபெற்​றது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News