இனி LPG சிலிண்டர் சிக்கல் இருக்காது .. அரசின் 10 முக்கிய அறிவிப்புகள் இதோ
LPG Gas Cylinder Shortage: LPG தட்டுபாடு தொடர்பாக, நாடு முழுவதும் தற்போது நெருக்கடியான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில், சுமார் 60 சதவீத எரிவாயு (கேஸ்) கத்தார், பஹ்ரைன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் தற்போது LPG மற்றும் LNG விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நெருக்கடியான நேரத்திலும், மோடி அரசாங்கம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அதன்படி இதுவரை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதில் இருந்த சிரமங்கள் பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளன. உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் வணிக ரீதியிலான LPG சிலிண்டர்கள் கிடைக்காததால் தற்போது சில சிக்கல்களை எதிர்கொண்டாலும், ஒட்டுமொத்த நிலைமையும் தற்போது அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
மேலும், எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான வதந்திகள், கேஸ் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக மோடி அரசாங்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது; இந்த நடவடிக்கை ஏற்கனவே கண்கூடான பலன்களைத் தரத் தொடங்கியுள்ளது. சிலர் கேஸ் சிலிண்டர் கிடைக்குமா கிடைக்காத என்கிற பதற்றத்தின் காரணமாக முன்கூட்டியே சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர், எனினும் இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது; எண்ணெய் நிறுவனங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதோடு, தினமும் சுமார் 6 மில்லியன் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன என்று அரசாங்கம் உறுதியாளித்துள்ளது.
தேசிய தலைநகரமான டெல்லியில் எல்பிஜி சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல், மீண்டும் நிரப்புதல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் 600க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
PNG இணைப்புகளுக்கான சிலிண்டர் முன்பதிவின் மீதான தடை
எல்பிஜி எரிவாயு பற்றாக்குறையை போக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு உள்ள வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்களிடம் உள்ள தற்போதைய எல்பிஜி சிலிண்டர்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளின்படி, PNG இணைப்பு உள்ள வீடுகளில் இனி எல்பிஜி சிலிண்டரை வைத்திருக்கவோ அல்லது புதிய சிலிண்டரை வாங்கவோ அனுமதிக்கப்படாது. எனவே மத்திய அரசு, PNG இணைப்பு உள்ள வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்க தடை விதித்துள்ளதுடன், தற்போதுள்ள எல்பிஜி இணைப்புகளை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.