3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல் பயிற்சி கல்லூரி டி.ஜி.பியாக ராஜீவ் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குநராக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமனம். கூட்டுறவு பால் உற்பத்தி சங்க முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டேவிட்சனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.