ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
நயினார் நாகேந்திரனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள கட்சியின் நிர்வாகிகள் அதை நிறைவேற்ற வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. நாட்டையே ஆளும் பெருமை கொண்ட பாஜக, தமிழ்நாட்டில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறறது. இது தேசிய தலைமைக்கு மிகப்பெரிய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
நயினார் நாகேந்திரன் மீது விமர்சனம்:
இந்த சூழலில், தமிழ்நாட்டில் பாஜக-வின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்த அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் இணைந்து வருகின்றனர்.
இந்த சூழலில், கமலாலயத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் ஒரு நயினார் நாகேந்திரனின் தலைமை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டிற்கு மற்ற மாவட்டத் தலைவர்களும் அமைதி காத்த நிலையில், நயினார் நாகேந்திரன் சற்று ஆடிப்போகியுள்ளார்.