தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 27.10.2025 முதல் 31.10.2025 வரை நடைபெற்று வரும் உலகளாவிய இந்திய கடல்சார் வார விழா – 2025 (India Maritime Week - 2025) நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், நேற்று (29.10.2025) கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் கலந்து கொண்டார்.