அடுத்தாண்டு புல்லட் ரயில் சேவை தொடங்கும்: மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்..!
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, அதாவது இந்தியாவின் 81-வது சுதந்திர தினத்தன்று முறைப்படி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வாபி, அகமதாபாத் மற்றும் மும்பை எனப் படிப்படியாக முக்கிய நகரங்களுக்கு இந்த அதிவேக ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.