மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்கிறது!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை விமான நிலைய ஓடுபாதையை நீட்டித்தல், புதிய முனையம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகம் வரும் மோடி, திருச்சியில் நடக்கும் அரசு விழா தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த 11ஆம் தேதி மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.