சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை என சொல்லப்படுகிறது. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன.
தமிழகத்தின் இதயப் பகுதியில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று திருச்சி. தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திற்கும் எளிதாகச் செல்லக்கூடிய வகையில் நடுப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மலைக்கோட்டை நகரான திருச்சி அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ரயில் நிலையம் அருகே அமைந்திருந்த சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பெரும் இடப்பற்றக்குறை ஏற்பட்டது. அங்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்ததால் அவற்றை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு திருச்சியின் நகரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பஞ்சப்பூரில் மறைந்த கலைஞர் கருணாநிதி பெயரில் மிக பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது தமிழகத்தின் முதல் ஏசி வசதி கொண்ட பேருந்து நிலையம் என்ற பெருமையை பெற்றது. இந்த பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன.