12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பிஎட் படிப்புகள் நிறுத்தம்
B.Ed Course Update : பிஎட் படிக்க திட்டமிட்டிருக்கும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த 4 ஆண்டு B. Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிஎட் படிப்புகள் நிறுத்தம் தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். (B.Sc.B.Ed) மற்றும் பி.ஏ. பி.எட். (B.A.B.Ed) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, வரும் 2026-2027 கல்வியாண்டு முதல் அதிரடியாக நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவித்துள்ளது.