1,000 உதவித்தொகை விடுவிப்பு..!!
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' திட்டம் மற்றும் மாணவர்களுக்கான 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ், மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை முறையாக வந்து சேராதது குறித்து சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.