Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு செய்கிறது ஒன்றிய அரசு!!

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு செய்கிறது ஒன்றிய அரசு!!

டெல்லி: தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக் கடலில் 30,000 லைன் கிலோ மீட்டருக்கு ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டது. தமிழ்நாடு போலவே வங்கம், பூர்ணியா, மகாநதி கடற்பரப்பிலும் ஆய்வு மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News