Select Location
All Locations
State
Region
City / District
கோவை சூலூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதி

கோவை சூலூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதி

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் இரங்கல்

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறுமி கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Dinamani 36 minutes ago
Home Flash News