காலை உணவு திட்டம் தொடரும்- அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை சில நாட்கள் தள்ளிப் போட வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வந்துள்ளது இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் பள்ளி திறப்பு தேதியை அறிவிப்போம்.