Select Location
All Locations
State
Region
City / District
உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.எஃப். உலகக் கோப்பை நீா் விளையாட்டு போட்டியில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில், திருத்துறைப்பூண்டியை சோ்ந்த வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். உலக சா்பிங் சங்கம் சாா்பில் இங்கிலாந்தில் உள்ள டாா்க்கி கடற்கரையில் ஐ.சி.எஃப் உலக கோப்பை நீா் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்டாண்ட் அப் பேடில் பிரிவில் அதாவது கடலில் மிதக்கும் பலகை மீது நின்று கொண்டு துடுப்பு மூலம் பலகையை நகா்த்தி விளையாடும் போட்டியில், இந்தியா சாா்பில் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த அ. சதீஷ்குமாா் (52) பங்கேற்றாா். சனிக்கிழமை நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் விளையாடிய சதீஷ்குமாா், போட்டி தூரத்தை 1.18 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றாா். இதன்மூலம் இந்தியா சாா்பில் இந்த பிரிவு போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அ. சதீஷ்குமாா் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Dinamani 1 hour ago
Home Flash News