Select Location
All Locations
State
Region
City / District
அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் மீது திமுக பரபரப்பு புகார்..!

அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் மீது திமுக பரபரப்பு புகார்..!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (DVAC) இன்று அனுப்பியுள்ள புகாரில், 'நீதிமன்றங்களில் அரசு சார்பாக வாதாடும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் நியமனம் என்பது மிக உயர்ந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். இந்தச் செயல்பாட்டில் நடக்கும் ஊழல் என்பது வெறும் நிர்வாக முறைகேடு மட்டுமல்ல; அது சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 21-இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் மக்களின் தீர்ப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறைத் திறனுக்குப் பதிலாக, இந்த பதவிகள் விலைக்கு வாங்கப்படுவதாகவும், விருப்பமுள்ள வேட்பாளர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் கோரப்பட்டு, அதுவே தேர்வுக்கான முக்கிய தகுதியாக மாற்றப்பட்டிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் ஒருவர், அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம், அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பெயரையும் அவரது ஆதரவையும் பயன்படுத்தி,, இந்த நியமனங்கள் அனைத்தும் அவரது அதிகாரத்தின் கீழ் தான் ஒதுக்கப்படுகின்றன என்று கூறி, முறையற்ற வகையில் தொடர்ந்து பணம் கோரி வசூலித்து வருவதாக எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இதேபோல், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மற்றொரு வழக்கறிஞர், தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞருடன் கூட்டுச் சேர்ந்து, இந்த நியமனங்கள் அமைச்சர் என். ஆனந்த் மூலமாகவே கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்று கூறி விண்ணப்பதார ர்களிடம் பணம் வசூலித்து வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.

 இடைத்தரகர்களின் இந்தச் செயல்பாடு ஏதோ ஒரு தனிப்பட்ட அல்லது தற்செயலான நிகழ்வு அல்ல. வெவ்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட வசூல் முகவர்கள், பணம் கோருவதற்கு ஒரே அமைச்சரின் பெயரையும் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரின் பெயரையும் தொடர்ந்து பயன்படுத்துவது, அமைச்சரின் அலுவலகங்கள் இந்த நியமனங்களுக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்பதற்கான வலுவான சூழ்நிலை ஆதாரமாகும். குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களால் வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயின் பணப் பரிவர்த்தனையையும் (வங்கி கணக்குகள், ரொக்கப் புழக்கம், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் பணம் கொடுத்த வேட்பாளர்களின் சாட்சியங்கள் மூலம்) DVAC விரிவாகக் கண்டறிய வேண்டும் என்று கோருகிறேன். இந்தத் தொகைகள் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரைச் சென்றடைந்ததா, அவர்களுக்குப் பலனளித்ததா அல்லது அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விநியோகிக்கப்பட்டதா என்பதைத் தீர்க்கமாக நிறுவி, இந்தச் சங்கிலித்தொடரில் உள்ள ஒவ்வொரு நபரையும் விதிவிலக்கின்றி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.


Smacy News 1 hour ago
Home Flash News