மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு..! இனி விடுதிகளில் தரக்குறைவான உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை
சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் தினசரி அனுப்ப உத்தரவு. சமூகநீதித்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, 3 வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தினமும் அனுப்ப சமூகநீதித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை எனத் தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் சமைக்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுக்க வேண்டும்.எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் குழு அல்லது பிரத்யேக எண் மூலம் தினமும் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.புகார்கள் மற்றும் தரக்குறைவான உணவுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்