Select Location
All Locations
State
Region
City / District
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 6-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 6-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புது டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக 6வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டதற்கு அமித் ஷா பொறுப்பேற்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். மழைக்காலக் கூட்டத்தொடரின் 6-வது நாளாக இன்று காலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி, விவாதங்களில் பங்கேற்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

அப்போது பேசிய ஓம் பிர்லா, “நான் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்துகிறேன். அவையின் கண்ணியத்தையும் மரபையும் மீறும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார். ஆனாலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை ஒத்திவைப்பு: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்த விவாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், மாநிலங்களவை நடைமுறை விதிகளின் கீழ் உள்ள விதி 267-ன் படி அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தர்மேந்திர பிரதானுக்கு வரவேற்பு: இதற்கிடையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நோக்கி என்டிஏ எம்.பி.க்கள், “தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்” என்று வரவேற்பு கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின்போது மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கும், காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். வினாத்தாள் கசிவு மசோதா: நீட் வினாத்​தாள் கசிவு விவகாரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்டத்​தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது. தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​களை தடுத்​தல்) சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்​கிய திருத்தங்கள் செய்​யப்​பட்டு புதிய மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. மக்​களவை​யில் இந்த மசோதாவை மத்​திய பணி​யாளர், பயிற்​சித் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் இன்று தாக்​கல் செய்ய உள்​ளதாக தகவல் வெளியானது.

இந்த மசோதா குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறியதாவது: புதிய மசோ​தா​வின்​படி வினாத்​தாள் கசிவு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​படும், குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படு​வோருக்கு 10 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும். முறை​கேடு​களில் ஈடு​படும் தேர்​வர்​கள் அடுத்த 8 ஆண்​டு​கள் எந்​த ஒரு பொதுத்​தேர்​வை​யும் எழுத முடி​யாது. வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க சிறப்பு அதிரடிப் படை (எஸ்​டிஎப்) நியமிக்​கப்​பட்டு, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட 3 மாதங்​களுக்​குள் விசா​ரணையை முடிக்க வேண்​டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Hindu Tamil 2 hours ago
Home Flash News