அறுபடை வீடுகளுக்கு ஆண்மீக பயணம்; துவங்கி வைத்த ஆட்சியர்!
ஈரோடு, திண்டல், அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் அடிவாரத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், 100 பக்தர்களை அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள அழைத்துச் செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறையும் சுற்றுலாத் துறையும் இணைந்து, ஏழை, எளிய மக்கள், முதியோர்களை ஆன்மீகத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு பயனாளிகள் ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் கோயிலுக்கு பயணம் செல்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.