மார்ச் மாதத்தில் பி.எம். கிசான் பணம்
PM Kisan 22nd installment date 2026: கடந்த 21-வது தவணையின் போது மட்டும் சுமார் 70 லட்சம் தகுதியற்ற பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போதும் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' (PM-Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகால நடைமுறைகளை ஆய்வு செய்ததில், திட்டத்தின் 22-வது தவணைத் தொகை இந்த மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு 6,000 ரூபாயை தலா 2,000 வீதம் மூன்று சமமான தவணைகளில் நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) மூலம் பெறுகின்றனர். பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை அரசு 21 தவணைகளை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
உங்களுக்கு வர வேண்டிய 2,000 ரூபாய் தடையின்றி கிடைக்க வேண்டுமெனில், கீழ்க்கண்ட மூன்று விஷயங்கள் உங்கள் அந்தஸ்து (Status) பக்கத்தில் 'ஆம்' (Yes) என்று இருக்க வேண்டும்:
இ-கேஒய்சி (e-KYC): இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் இணையதளம் வழியாக ஓடிபி (OTP) மூலமாகவோ அல்லது பொதுச் சேவை மையங்களுக்குச் சென்றோ இதை முடிக்கலாம்.
நில இணைப்பு (Land Seeding): உங்கள் நில ஆவணங்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதில் 'No' என்று இருந்தால், உடனடியாக உங்கள் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சரிசெய்ய வேண்டும்.
ஆதார் - வங்கி இணைப்பு: உங்கள் வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு, நேரடி பணப்பரிமாற்றத்திற்கு (DBT) தயாராக இருக்க வேண்டும்.