அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது - பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை.
தவெகவினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.. பல்வேறு இடங்களில் தவெகவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது.
மக்கள் சேவைக்காகதான் கட்சி தொடங்கப்பட்டது. எனவே, சேவையில் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் அதில் மாற்றம் இல்லை. கட்சியினர் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடலாம். ஆனால் தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்