இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.10,043 கோடியாக (1.09 பில்லியன் டாலா்) குறைந்துள்ளதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.15,790 கோடியாகவும் (1.65 பில்லியன் டாலா்), பிப்ரவரியில் ரூ.12,441 கோடியாகவும் (1.3 பில்லியன் டாலா்) இருந்த நிலையில், மாா்ச் மாதம் குறைந்துள்ளது.
‘தனிநபா்களுக்கான தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ்’ இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான செலவு, உறவினா்களுக்கு அனுப்பப்படும் தொகை, முதலீடுகள் தொடா்பான தரவுகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாா்ச் மாதத்தில் இந்தியா்களின் ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணச் செலவு 1.09 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சா்வதேச சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவம் மற்றும் கல்விக்கான பயணம் என வெளிநாட்டுப் பயணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
இதில் விடுமுறை காலங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுச் சுற்றுலா உள்ளிட்ட பிற பயணங்களுக்கு ரூ.5,962 கோடி (623.05 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளது. இது இந்தியா்களின் ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பயணச் செலவில் 57 சதவீதமாகும்.
மாா்ச் மாதத்தில் கல்விக்கான வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.4,308 கோடியாகவும் (450.16 மில்லியன் டாலா்), வணிகம், மருத்துவம் மற்றும் ஆன்மிகப் பயணத்துக்கான செலவு ரூ.204 கோடியாகவும் (21.39 மில்லியன் டாலா்) உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மேற்காசிய போா் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வெளிநாட்டுப் பயணங்களை இந்தியா்கள் தவிா்க்குமாறு அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா். வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் குறைப்பதால் அந்நியப் பரிவா்த்தனை குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் குறைக்க முடியும் என்ற நோக்கில் பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா். இந்நிலையில், மாா்ச் மாதம் இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது தெரியவந்துள்ளது.