Select Location
All Locations
State
Region
City / District
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் அமைக்கப்படும்: இயக்குநர் தகவல்

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் அமைக்கப்படும்: இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில், அதிநவீன வசதிகளுடன் 5-வது பெர்மினல் அமைக்கப்படும் என்று, அதன் இயக்குநர் ராஜா கிஷோர் தெரிவித்தார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஜூன் 15ம் தேதி "பயணிகள் வசதி தினம்" நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி, சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜர் கிஷோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயணிகள் வசதிகள் தினம் என்ற இந்த விழா, ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, பயணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, வரவேற்பு, வழி அனுப்புதல், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். சென்னை விமான நிலை யத்தில், ஒருங்கிணைந்த புதிய 3-வது டெர்மினல் கட்டுமான பணிகள் வரும் டிசம் பர் இறுதிக்குள் நிறைவடை யும். பயணிகள் வசதிக்காக, டெர்மினல் அருகே கட்டப்பட்டு வரும் வாகனங்கள் பிக்கப் பாயிண்ட்டுடன் கூடிய பிளாசா பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் இது செயல்பட தொடங்கும்.

சென்னை விமான நிலையத்தில், தற்போது, டெர்மினல்கள் 1, 2, 4 செயல் பாட்டில் உள்ளன. அதி நவீன வசதிகளுடன் 5-வது டெர்மினல் கட்டப்பட உள்ளது. இந்த டெர்மினலில் பயணிகள் போக்குவரத்துகள் மட்டுமின்றி, சரக்குகள் போக்கு வரத்துக்கான கார்கோ பகுதி இருக்கும். பயணிகள் போக்கு வரத்துக்கு, பல்வேறு நவீன வசதிகள், சரக்குகள், விரைவாக, விமானங்களில் லோடிங், ஆப் லோடிங் செய்யப்படும்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக,ரோபோ டைப், ஸ்மார்ட் டிராலிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பயணிகள் செக்கின் ஏரியாவில் இந்த அதி நவீன டிராலிகளை பயன்படுத்தலாம்.

60 சதவீத பணிகள் நிறைவு: சென்னை விமான நிலையத்தில் மழைக் காலங்களில் ஓடு பாதை பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் சூழப்படுவதால், விமான சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, விமான நிலைய பகுதி, விமான நிலையம் அருகே உள்ள சாலைகளில் உள்ள மழை நீர் விமான நிலையத்துக்குள் தேங்காமல், அடையாறு ஆற்றில் கலக்க செய்ய, பெரிய மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம், மழைக் காலங்களில் விமான போக்கு வரத்து தடைபடுவது குறையும். சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம். பரந்தூரில் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Hindu Tamil 3 hours ago
Home Flash News