Select Location
All Locations
State
Region
City / District
15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு..!

15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு..!

மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு;

1.கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா
 2.ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ்
 3.சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன்
 4.சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார்
 5.திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன்
 6.கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ்
 7.குரங்கணி எஸ்ஐ- அருண்
 8.குமுளி ஏட்டு- ராஜ்குமார்
 9.நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன்
 10.கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன்
 11.நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர்
 12.நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன்
 13.சென்னை ஆர்.3,அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார்
 14.கரூர் சிறப்பு எஸ்ஐ - செந்தில்குமார்
 15.தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன்


Smacy News 2 hours ago
Home Flash News