புறநோயாளிகள் சேவைகளுக்கு இணைய முன்பதிவு: விரைவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமல்!
புறநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கு இணையவழியே முன்பதிவு செய்யும் நடைமுறை சோதனை முயற்சியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: போலியோ சொட்டு மருந்தை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினால்தான் சமுதாய அளவில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும்.
தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டிலேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. 2014-இல் போலியோ இல்லாத நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், போலியோ பாதிப்பு இப்போதும் உள்ளது. அதனால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக வழங்கப்படுகிறது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது கட்டாயம். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கிராம சுகாதார செவிலியா்கள் வீடுதோறும் சென்று விடுபட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனா். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் இணையவழி முன்பதிவு வசதிக்கான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. முதல்கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சோதனை முறையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.