வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர் விநோத்… சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் செயல்
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு ஆவணத்தை எடுத்துக்கொண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் ஆவணத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, மாநிலத்தின் விவசாயிகள் நலன், மழை, அதிக விளைச்சல் மற்றும் வேளாண் வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.