சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர்: உப்புத்துறை மலைப்பாதை வழியாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், வனவிலங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளது. யானைகஜம் வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.