திருவண்ணாமலையில் மாநகராட்சி இணைப்பிற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தங்களது கிராமங்களை மீண்டும் மாநகராட்சியில் இருந்து நீக்கி மீண்டும் கிராம ஊராட்சியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.