IndiGo Emergency Landing: நடுவானில் பழுதான இன்ஜின்! சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில், தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் உடனடியாக 'முழு அவசரநிலை' (Full Emergency) பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், பைலட்டின் சமயோசித செயலால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் எண் 6E-723 ஆகும். இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் 224 பேர் பயணித்தனர். அட்டவணைப்படி இரவு 11:30 மணிக்கு விமானம் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால், தரையிறங்குவதற்குச் சற்று முன்பு, இரவு 11:29 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.