பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம்
சென்னை: பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி பெற்றதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர்கள், வாக்காளர்கள் தாக்கல் செய்த 4 தேர்தல் வழக்குகளின் விசாரணையும் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.