Select Location
All Locations
State
Region
City / District
தமிழகம் - ஆந்திரா இடையே சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை:

தமிழகம் - ஆந்திரா இடையே சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

சென்னை: தமிழகம் - ஆந்​திரா கடல் பகு​தி​யில் தமிழக மீனவர்​கள் சுமுக​மாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டிருப்​ப​தாக மீன்​வளத்​துறை அமைச்​சர் ஸ்ரீநாத் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று நேரமில்லா நேரத்​தில் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி பேசுகை​யில், “மயி​லாடு​துறை மாவட்​டம், திரு​முல்​லை​ வாசல் ஊராட்​சி, கொடு​வாய் கிராமத்​தைச் சேர்ந்த 4 மீனவர்​கள் சவுதி அரேபி​யா​வில் தங்கி மீன்​பிடித்து வந்​தனர்.

அப்​போது ஈரான் கடல் கொள்​ளை​யர்​கள் தாக்​குதலில் மாவீரன் என்ற மீனவர் உயி​ரிழந்​தார். சென்னை காசிமேட்​டில் இருந்து சென்ற தமிழக மீனவர்​கள் ஆந்​திர கடல் பகு​தி​யில் மீன் பிடித்​துக் ​கொண்​டிருந்​த​போது, கடந்த 17-ம் தேதி, ஆந்​திர அதி​காரி​கள் 8 விசைப் படகு​களை பறி​முதல் செய்​து, அவற்​றில் இருந்த மீனவர்​களை கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இவ்​விரு நிகழ்​வு​கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

இதே பிரச்​சினை குறித்து பாமக எம்​எல்ஏ சிவக்​கு​மார், திமுக எம்​எல்ஏ செந்​தில் செல்​வன், இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ டி.​ராமச்​சந்​திரன், மார்க்​சிஸ்ட் எம்​எல்ஏ செல்​வசு​வாமி ஆகியோ​ரும் பேசி​னார். இதற்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா அளித்த பதிலில், “சவுதி அரேபி​யா​வில் தமிழக மீனவர்​கள் 4 பேர் மீது கடந்த ஆக. 10-ம் தேதி, ஈரானிய கடல் கொள்​ளை​யர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டுள்​ளனர். இதில் மீனவர் மாவீரன் உயி​ரிழந்​தார். காயமடைந்த சங்​கர் ஆபத்​தான நிலை​யில் சவுதி அரேபியா ராணுவ மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். 

லேசான காயமடைந்த பால்​ராஜ், மணி​கண்​டன் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்​ட​தாக தகவல் வந்​துள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக புலன் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதனால் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இவரது உடலை தமிழகம் கொண்​டு​வர​வும், காயமடைந்​த வர்​களை அழைத்து வரவும் தேவை​யான நடவடிக்​கைகளை மயிலாடு​துறை மாவட்ட ஆட்​சி​யர் மேற்​கொண்டு வரு​கிறார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News