விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். மேலும், சுற்றுலாத் தலங்களுக்கு நேரடி பேருந்துகள் இயக்கவும், பணிமனைகளை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை அறிவிப்பை தவெக அரசு நிறைவேற்றவில்லை என்றும், தமிழ்நாட்டில் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.