இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மேற்கு பிராந்திய ராணுவம், பிரம்மாண்ட செயல்பாட்டுத் திறன் மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்தியது.
அப்போது பல்வேறு களங்களில் வீரதீரச் செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பின்னர் மேடையில் பேசிய மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார், பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால், இந்த முறை இந்தியாவின் தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை தாண்டி பாகிஸ்தானின் நிலப்பரப்பு வரை விரிவடையும் என எச்சரித்தார்.