சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி - ஹைலைட்ஸ் பார்வை
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார் சஞ்சு சாம்சன். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன. கேமரூன் கிரீன் வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி விரட்ட 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.
மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துகளில், 7 ரன்கள் எடுத்த நிலையில் அனுகுல் ராய் சுழற்பந்து வீச்சில் ஸ்வீப் ஷாட் விளையாடிய போது டீப் விக்கெட் திசையில் நின்ற ரோவ்மன் பவலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஜோடி 2.2 ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மட்டையை சுழற்றினார். கேமரூன் கிரீன் வீசிய 4-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட்டன. ஆயுஷ் மாத்ரேவின் அதிரடியால் சிஎஸ்கே அணி 4 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. அனுகுல்ராய் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசினார். வைபவ் அரோரா வீசிய 6-வது ஓவரில் முதல் 3 பந்துகளையும் ஆயுஷ் மாத்ரே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தை அரோரா ஷாட் பாலாக வீச அதை ஆயுஷ் மாத்ரே டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து ரமன்தீப் சிங், ரோவ்மன் பவலுடன் இணைந்தார். ஜேமி ஓவர்டன் வீசிய 14-வது ஓவரில் ரோவ்மன் பவல் சிக்ஸர் விளாசினார். கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 73 ரன்கள் தேவையாக இருந்தன. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. அன்ஷுல் கம்போஜ் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஜேமி ஓவர்டன் வீசிய 19-வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி ஓவரில் 45 ரன்கள் தேவையாக இருந்தன. இது சாத்தியம் இல்லை என்பதால் சிஎஸ்கே அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அன்ஷுல் கம்போஜ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடுத்த ரமன்தீப் சிங் 3-வது பந்தில் சர்பராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரமன்தீப் சிங் 23 பந்துகளில், 35 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரோவ்மன் பவல் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்களும், அனுகுல் ராய் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்களையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அகீல் ஹோசைன், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி நடப்பு சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.