Select Location
All Locations
State
Region
City / District
"வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்"- விஜய் எச்சரிக்கை

"வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்"- விஜய் எச்சரிக்கை

தவெக சார்பில் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 

நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். மேலும் எல்லோரும் நம்பிக்கையுடன் முடிவுகளை நோக்கிக் காத்திருங்கள், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பனையூர் வாருங்கள் உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன். வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்க வேண்டும். இரவு எந்நேரமானாலும் பனையூருக்கு வந்துவிடவேண்டும். மே 4ஆம் தேதி காத்திருப்பேன்.இதுவரை நன்றாக பணியாற்றியுள்ளீர்கள். மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருங்கள். வெற்றி பெரும் வேட்பாளர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது” என அறிவுறுத்தினார். 


Smacy News 16 hours ago
Home Flash News