Select Location
All Locations
State
Region
City / District
அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அமைச்சருக்காக நடை சாத்துவதில் தாமதம் என புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

அமைச்சர் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. பக்தர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர் அமைச்சர் சாமி தரிசனத்திற்காக கோவில் நடை தாமதமாக சாத்தப்பட்டு ஆகம விதியை கோவில் நிர்வாகம் மீறியதாக பக்தர்கள் குற்றச்சாட்டினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோலிவில் அமைச்சர் நிரமல்குமார் சென்ற போது நடந்தது என்ன என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேறு வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Dinakaran 45 minutes ago
Home Flash News