Select Location
All Locations
State
Region
City / District
தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் பேரம் : ரூ.35 கோடியை தயார் செய்த செந்தில் பாலாஜி நண்பர்கள்..!

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் பேரம் : ரூ.35 கோடியை தயார் செய்த செந்தில் பாலாஜி நண்பர்கள்..!

சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்தாலும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும், அதற்கு ரூ.35 கோடி வரை பணம் கிடைக்கும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் சிலர் பேசி உள்ளனர். இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக எம்​எல்ஏ டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை, சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் செல்​போனில் தொடர்பு கொண்​டுள்​ளார். அப்​போது, தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும், முக்​கிய அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது. ஆனால், வேறு பணி​யில் இருப்​ப​தாக கூறி எம்​எல்ஏ இளை​ய​ராஜா அந்த அழைப்பை துண்​டித்​துள்​ளார். அதன் பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​தாக கூறப்​படும் திரு​நாவுக்​கரசு, தமிழக சட்டப்​ பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும், அந்த தீர்​மானத்​தின் மீதான வாக்​கெடுப்​பின் போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாக தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்க தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும், அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்த போது, ‘‘இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும்’’ என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார். அதில், ‘‘மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​ விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன், லஞ்​சம் வழங்க முன்​வந்​தும், உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில், திரு​வல்​லிக்​கேணி போலீ​சார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். செல்​போன் அழைப்பு விவரங்​கள், தொழில்​நுட்ப ஆதா​ரங்​களை சேகரித்தனர். தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நரேசை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னையில் வைத்து நேரடியாக சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45) வீட்டில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டு அவரையும் கைது செய்தனர். தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய புகாரில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரமேஷ், சீனிவாசன், செல்வம் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அசோக் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Smacy News 58 minutes ago
Home Flash News